எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் -2 கற்கண்டு- புத்தக வினாக்கள் | Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் -2 கற்கண்டு- புத்தக வினாக்கள்  | Tamil easy study


 இயல்  இரண்டு      ப . எண் -38
 கற்கண்டு

வினைமுற்று

கற்பவை கற்றபின் 


'வாழ்க’ என்னும் சொல்லை ஐந்து பால்களிலும், மூன்று இடங்களிலும் இடம் பெறுமாறு  தொடர்களை எழுதுக. 

(எ.கா ) அவன் வாழ்க. (ஆண்பால்)
நாம் வாழ்க. ( தன்மை )

விடை

   ஐந்து பால்கள்

1. அவன் வாழ்க.   (ஆண்பால்)
2. அவன் வாழ்க.   (பெண்பால்)
3.அவர்கள் வாழ்க.   ( பலர்பால்)
4.அது வாழ்க.   (ஒன்றன்பால்)
5.அவை வாழ்க.   ( பலவின்பால்)


மூன்று இடங்கள்

1.  நாம் வாழ்க.   ( தன்மை )
2.  நீங்கள் வாழ்க.   ( முன்னிலை )
3. அவர்கள் வாழ்க.  ( படர்க்கை )

----------------------------------------------------------------------------------------------

மதிப்பீடு 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 
1. மாடு வயலில் புல்லை மேய்ந்தது. – இத்தொடரிலுள்ள வினைமுற்று _____
அ) மாடு  ஆ) வயல்  இ) புல்  ஈ) மேய்ந்தது 
விடை  : ஈ) மேய்ந்தது 

2. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று _____.
 அ) படித்தான்  ஆ) நடக்கிறான்   இ) உண்பான்   ஈ) ஓடாது
விடை  :  அ) படித்தான்

 3. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் _____. 
அ) செல்க   ஆ) ஓடு   இ) வாழ்க   ஈ) வாழிய
விடை  : ஆ) ஓடு 

-----------------------------------------------------------------------------------------

சிறுவினா 

1. வினைமுற்று என்றால் என்ன? 
* பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்களை முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர். 
* வினைமுற்று ஐந்து பால், மூன்று காலம், மூன்று இடம் ஆகிய அனைத்திலும் வரும்.
(எ.கா )
மலர்விழி எழுதினாள்.  கண்ணன் பாடுகிறான்.  மாடு மேயும்.

2. தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்? 

* ஒரு செயல் நடைபெ றுவதற்குச் செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும். 
* இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும். 

(எ.கா.) 
மாணவி கட்டுரை எழுதினாள். 
செய்பவர் - மாணவி 
காலம் - இறந்தகாலம் 
கருவி - தாளும் எழுதுகோலும் 
செய்பொருள் - கட்டுரை 
நிலம் - பள்ளி 
செயல் - எழுதுதல்

3. வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை? 
வியங்கோள் வினைமுற்று  விகுதிகள்  க, இய, இயர், அல் என வரும். 
(எ.கா ) வாழ்க, ஒழிக, வாழியர், வாரல்

4. ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை ?
 

ஏவல் வினைமுற்று


வியங்கோள் வினைமுற்று

முன்னி்லயில் வரும்.

இருதி்ண ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய்  வரும் .

ஒருமை ,பன்மை வேறுபாடு  உணடு.

ஒருமை ,பன்மை வேறுபாடு இல்லை .

கட்டளைப் பொருளை  மட்டும் உணர்ததும். 

வாழ்தல் , வைதல் ,விதித்தல் , வேண்டல்  ஆகியபொருளை உணர்ததும்.

விகுதி பெற்றும் பெறாமலும்  வரும்.

விகுதி  பெற்றே  வரும்.





---------------------------------------------------------------------------------

Comments

Popular posts from this blog

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 1 புத்தக வினாக்கள்| மொழியை ஆள்வோம்! |மொழியோடு விளையாடு |Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 2-கவிதைப்பேழை - புத்தக வினாக்கள் | Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் -1 புத்தக வினாக்கள் | Tamil easy study 6 ,7 ,8