எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் -1 புத்தக வினாக்கள் | Tamil easy study 6 ,7 ,8

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல்- 1 -கவிதைப்பேழை - புத்தக வினாக்கள் | Tamil easy study

கவிதைப்பேழை

 புத்தக வினாக்கள்   -      ப.எண் : 4

மதிப்பீடு 
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் _____. 
அ) வைப்பு   ஆ) கடல்   இ) பரவை   ஈ) ஆழி 
விடை  :    அ) வைப்பு   

2. ‘என்றென்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.
 அ) என் + றென்றும்   ஆ) என்று + என்றும்   இ) என்றும் + என்றும்
 ஈ) என் + என்றும் 
விடை  : ஆ) என்று + என்றும்

3. ‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______. அ) வான + மளந்தது  ஆ) வான் + அளந்தது   இ) வானம் + அளந்தது
 ஈ) வான் + மளந்தது
விடை  :ஆ) வான் + அளந்தது  

 4. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ ) அறிந்ததுஅனைத்தும்   ஆ) அறிந்தனைத்தும்   இ) அறிந்ததனைத்தும்
 ஈ) அறிந்துனைத்தும்
விடை  :இ) அறிந்ததனைத்தும்
 
5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
 அ ) வானம்அறிந்து  ஆ) வான்அறிந்த   இ) வானமறிந்த  ஈ) வான்மறிந்த 
விடை  :இ) வானமறிந்த 

1 .தமிழ் மொழி வாழ்த்து__ இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச்  சொற்களை  எடுத்து எழுதுக:
_____   _______  _______  ______

______  ______  _______  _______ 

விடை:;   வாழ்க - வாழிய ;   வான மளந்தத  - வண்மொழி                                                             எங்கள் - என்றென்றும்  :வானம் - வளர்மொழி .

குறுவினா:

1.)   தமிழ்   எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?
    ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மனத்தைப் பரவச் செய்து, புகழ் கொண்ட தாய்மொழியாக 
   தமிழ்  வாழ்கிறது .

2.)  தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?
   வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாம்  பெரும் எ
ல்லைகளையும்  அறிந்து மென்மேலும் தமிழ்மொழி வளர்கிறது .


சிறுவினா:
  

1) தமிழ் மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக .

1. தமிழ்மொழி எக்காலத்தும் நிலை பெற்று வாழ்க!

2.)  ஆகாயத்தில் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ்மொழி வாழ்க!

3.)  ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய  மனத்தைப் பரவச்   செய்து,  புகழ் கொண்ட தமிழ் மொழி வாழ்க !

4.)   எங்கள் தாய் மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க!

5.)  எங்கும்  சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்கட்டும்!   அதனால் தமிழ் மொழி  மேன்மை யுற்று  உலகம் முழுவதும் சிறப்படைய!

6.) பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்க தமிழ்நாடு ஒளிர்க!

7.)  வானம் வரை உள்ளடங்கியுள்ள   பொருண்மைகளையும்  அறிந்து மேன்மேலும் தமிழ்மொழி வளருகிறது.

சிந்தனை வினா 

பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?

--------------------------------------------------------------

 தமிழ் மொழி மரபு

மதிப்பீடு                            ப.எண் : 7

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 1.  பறவைகள்_________  பறந்து செல்கின்றன
        அ)   நிலத்தில்   ஆ) விசும்பில்  இ)  மரத்தில்  ஈ) நீரில்
         விடை  :ஆ) விசும்பில்

 2.  இயற்கையைப் போற்றுதல் தமிழர்_________
       அ) மரபு  ஆ) பொழுது  இ) வரவு  ஈ) தகவு

       விடை  : அ) மரபு 

3. ' இருதிணை'"  என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________
   அ)  இரண்டு +  திணை    ஆ) இரு +  திணை   

      இ)  இருவர் +  திணை   ஈ)   இருந்து +  திணை

     விடை  : அ)  இரண்டு +  திணை

 4. ' ஐம்பால்" 'என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

      அ) ஐம்+பால் ஆ) ஐந்து+ பால்  இ) ஐம்பது+ பால்   ஈ)  ஐ+பால்

     விடை  :  ஆ) ஐந்து+ பால்

 

--------------------------------------------------------------------------------------------------------------------- 

குறுவினா

1.  உலகம் எவற்றால் ஆனது?

  உலகம் நிலம் ,நீர், தீ ,காற்று, வானம் ஆகிய ஐந்தும் கலந்த  கலவையால் ஆனது.

2.   செய்யுளில் மரபுகளை ஏன் மாற்றக்கூடாது?

    திணை பால் வேறுபாடு அறிந்து, இவ்வுலகப் பொருட்களை நம்முன்னோர் கூறிய  சொற்களால் கூறுதல் வேண்டும்.   
   இம் மரபான சொற்களையே செய்யுளிலும் பயன்படுத்துதல் வேண்டும்.
தமிழ் மொழிச் சொற்களை வழங்குவதில் மரபு மாறினால் பொருள் மாறிவிடும் .
----------------------------------------------------------------------------------------

தெரிந்து கொள்வோம்      ப. எண் - 6




இளமைப் பெயர்கள்


ஒலி மரபு

புலி - பறழ் 

புலி - உறுமும்

சிங்கம் -குருளை

சிங்கம் - முழஙகும்

யானை - கன்று

யானை - பிளிறும்

பசு -  கன்று

பசு -கதறும்

ஆடு -குட்டி 

ஆடு  -   கத்தும்


----------------------------------------------------------------------------------------



Comments

Popular posts from this blog

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 1 புத்தக வினாக்கள்| மொழியை ஆள்வோம்! |மொழியோடு விளையாடு |Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 2-கவிதைப்பேழை - புத்தக வினாக்கள் | Tamil easy study