எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 2-கவிதைப்பேழை - புத்தக வினாக்கள் | Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 2-கவிதைப்பேழை - புத்தக வினாக்கள்  | Tamil easy study
  

இயல் - 2            ஈடில்லா இயற்கை

கவிதைப்பேழை    

    ஓடை                   ப.எண் :  26


மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 1. பள்ளிக்குச் சென்று கல்வி __________ சிறப்பு. 

அ) பயிலுதல்  ஆ) பார்த்தல்  இ) கேட்டல்  ஈ) பாடுதல்

விடை :  அ) பயிலுதல்

 2. செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ________. 

அ) கடல்  ஆ) ஓடை  இ) குளம்  ஈ) கிணறு 

விடை :ஆ) ஓடை

3. ‘நன்செய்’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________. 

அ) நன் + செய்  ஆ) நன்று + செய் 

இ) நன்மை + செய்   ஈ) நல் + செய்

விடை :  இ) நன்மை + செய் 

 4. ‘நீளுழைப்பு’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________. 

 அ) நீளு + உழைப்பு  ஆ) நீண் + உழைப்பு   இ) நீள் + அழைப்பு   ஈ) நீள் + உழைப்பு 

விடை :  ஈ) நீள் + உழைப்பு 

5. சீருக்கு + ஏற்ப – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் __________.

 அ) சீருக்குஏற்ப  ஆ) சீருக்கேற்ப  

இ) சீர்க்கேற்ப  ஈ) சீருகேற்ப

விடை : ஆ) சீருக்கேற்ப 

 6. ஓடை + ஆட – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________.

 அ) ஓடைஆட  ஆ) ஓடையாட 

 இ) ஓடையோட  ஈ) ஓடைவாட

விடை : ஆ) ஓடையாட

----------------------------------------------------------------------------

குறுவினா

 1. ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்? 

    ஓடை  கற்களில் உருணடும் தவழ்ந்தும்  நெளிந்தும் சலசல  என்று ஒலி எழுப்பியபடி ஓடுகிறது .

2. ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக வாணிதாசன் கூறுகிறார்? 

   சிறநத சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வள்ளைப் பாட்டின்   சிறப்புக்கேற்ப முழவை முழக்குவது  போல் ஒலி எழுப்புகிறது  என்று வாணிதாசன் கூறுகிறார் .


---------------------------------------------------------------------------

சிறுவினா 

ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?

1 . நன்செய் ,புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச்  செய்கிறது. . 

2 . அவ்வாறு வி்ளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறு்மையைப் போக்குகிறது. 

3 .குளிர்ச்சி்யைத்  தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது. 

4 . நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இ்டையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது என வாணிதாசன் குறிப்பிடுகிறார் .



-------------------------------------------------------------------------

இயல் 2   

கவிதைப்பேழை       ப.எண் :29

கோணக்காத்துப் பாட்டு 

மதிப்பீடு

 சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 1. வானில் கரு _____ தோன்றினால் மழை பொழியும் என்பர
   அ) முகில்  ஆ) துகில்  இ) வெயில்  
ஈ) கயல் 
விடை : அ) முகில்

2. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் _____யும் ஓட்டிவிடும். 
அ) பாலனை   ஆ) காலனை    
 இ) ஆற்றலை   ஈ) நலத்தை
 விடை :   ஆ) காலனை

3. ‘விழுந்ததங்கே’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____
அ) விழுந்த + அங்கே  ஆ) விழுந்த + ஆங்கே   இ) விழுந்தது + அங்கே 
   ஈ) விழுந்தது + ஆங்கே 
விடை : இ) விழுந்தது + அங்கே 

4. ‘செத்திறந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. 
  அ) செ + திறந்த    ஆ) செத்து + திறந்த   இ) செ + இறந்த    ஈ) செத்து + இறந்த 
விடை :  ஈ) செத்து + இறந்த 

5. பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
 அ) பருத்திஎல்லாம்   
ஆ) பருத்தியெல்லாம்  இ) பருத்தெல்லாம் 
  ஈ) பருத்திதெல்லாம் 
விடை : ஆ) பருத்தியெல்லாம்  


---------------------------------------------------------------------------

குறுவினா

 1. கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுவது யாது?
      கடலில் வி்ரைந்து வந்த கப்பல் எமனைப் போல  வந்த பெருமழையினாலும் சுழல்காற்றினாலும் கவிழ்ந்தது .


 2. புயல்காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது? 
    அழகிய சுவர்களை  உ டைய  மாடி  வீடுகள் அடியோடு  விழுந்தன.   ஆடவர்கள்  மனைவி, பிள்ளைகளுடன் ‘கூகூ’ என்று அலறியபடி ஓடினர்.    தொண்டைமான்  நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட  மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிநது விழுந்தன.

3. கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது? 
     சித்தர்கள் வாழும்  பகுதி கொல்லிமலை  .அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புயல் அடித்தது என்று பாடலில்  கூறப்பட்டுள்ளது .

--------------------------------------------------------
சிறுவினா

 1. புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை?

 * புயல் காற்றினால் வாங்கல் என்னும் ஊரில் அழகாக  வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின. 
*  தொண்டைமான்  நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட  மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிநது விழுந்தன.

 2. கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை? 
*  கோணக்காற்று வேகமாக அடித்ததால்  பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. 
 * அழகிய சுவர்களை  உ டைய  மாடி  வீடுகள் அடியோடு விழுந்தன.




---------------------------------------------------------------------------------------------------------________  ‐------------------------











Comments

Popular posts from this blog

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 1 புத்தக வினாக்கள்| மொழியை ஆள்வோம்! |மொழியோடு விளையாடு |Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் -1 புத்தக வினாக்கள் | Tamil easy study 6 ,7 ,8