எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் -2 -உரைநடை உலகம் - புத்தக வினாக்கள் | Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் -2 -உரைநடை உலகம் - புத்தக வினாக்கள்  | Tamil easy study

--------------------------------------------------------------------------------------

 இயல்   2      உரைநடை உலகம் 

 நிலம் பொது  

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. செவ்விந்தியர்கள் நிலத்தைத் _____ மதிக்கின்றனர். 
அ) தாயாக  ஆ) தந்தையாக இ) தெய்வமாக ஈ) தூய்மையாக
விடை : அ) தாயாக

 2. ‘இன்னோசை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. 
அ) இன் + ஓசை ஆ) இனி + ஓசை இ) இனிமை + ஓசை ஈ) இன் + னோசை
விடை :  இ) இனிமை + ஓசை

 3. பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____. 
அ) பால்ஊறும் ஆ) பாலூறும் இ) பால்லூறும் ஈ) பாஊறும
விடை : ஆ) பாலூறும் 


தொடரில் அமைத்து எழுதுக.

 1. வேடிக்கை -     எங்கள் ஊர் திருவிழாவில் வான வேடிக்கை நடைபெற்றது .

2. உடன்பிறந்தார் -    நானும் என் நண்பனும் உடன்பிறந்தார் போல பழகுவோம் .


---------------------------------------------------------------------------------------------

 குறுவினா 

1. விலைகொடுத்து வாங்க இயலாதவை எனச் சியாட்டல் கூறுவன யாவை?
     இந்தப் பூமிக்கு அணுக்கமாக உள்ள வானத்தை எப்படி வாங்கவோ விற்கவோ முடியும்? இவ்வாறு செய்ய வேண்டுமென்ற எண்ணமே வேடிக்கையாகத் தோன்றுகிறது.
      காற்றின் தூய்மையும் நீரின் உயர்வும் யாருக்கும் சொந்தமானவை அல்ல. அப்படியிருக்கையில் நீங்கள் அவற்றை எவ்வாறு விலைகொடுத்து வாங்க முடியும் எனச் சியோட்டல் கூறுகிறார் .
 

2. நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது? 
    இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் செவ்விந்தியர்களுக்கு புனிதமானதாகும். 
அம்மக்கள் இந்தப் பூமியை எப்பொழுதும் மறப்பதேயில்லை. ஏனெனில் இதுவே  அவர்களுக்குத் தாயாகும் .அவர்களே இந்த மண்ணுக்கு உரியவர்கள் . 

3. எதனைத் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்? 
        செவ்விந்தியர்கள் வாழும் பகுதியில் உள்ள எருமைகள் கொல்லப்படுவதையும்  எங்குப் பார்த்தாலும் மக்கள்  நடமாட்டம்   அதிகரிப்பதையும்  தொன்மையான மலைகளை மறைத்துத்  தொலைபேசிக் கம்பிகள் பெருகி வருவதையும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனச் சியோட்டல் கூறுகிறார் .


--------------------------------------------------------------------------

சிறுவினா 

1. நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளவற்றை எழுதுக.

*  ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம்மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவுகூர்பவை. 
*  இந்த நீரின் முணுமுணுப்புகள் எம் பாட்டன்மார்களின் குரல்களேயாகும்.
*  இந்த ஆறுகள் யாவும் எம் உடன்பிறந்தவர்கள். இவர்கள்தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள். 
*  எம்மக்களின் தோணிகளையும் இவர்களே சுமந்து செல்கின்றனர்; குழந்தைகளுக்கு உணவளிக்கின்றனர்.
*  இங்குள்ள ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடும் வனப்புமிகு நீரானது வெறும் தண்ணீரன்று ; எமது மூதாதையரின் குருதியாகும்.


---------------------------------------------------------------------------------------


 2. எவையெல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்று சியாட்டல் கூறுகிறார் ? 
     *  செவ்விந்திய மக்கள் இந்தப்  பூமியை எப்பொழுதும் மறப்பதேயில்லை. 
*  ஏனெனில் இதுவே அவர்களுக்குத் தாயாகும் .அவர்களே இந்த மண்ணுக்கு உரியவர்கள் .  இந்த மண்ணும்  அவர்களுக்குரியதாகும். 
*   இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது சகோதரிகள். மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் எமது சகோதரர்கள். 
*  மலை முகடுகள், பசும்புல்வெளிகளி ன் பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடல்சூட்டின் இ தமா ன கதகதப்பு போன்றவையும் இங்குள்ள  மனிதர்கள் எல்லாமும் ஒரே குடும்பம் எனச் சியோட்டல் கூறுகிறார் .



--------------------------------------------------------------------------------------------

நெடுவினா


 தாய்மண் மீதான செவ்விந்தியர்களின் பற்றுக் குறித்துச் சியாட்டல் கூறுவனவற்றைத் தொகுத்து எழதுக.

  * இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும்  செவ்விந்தியர்களுக்கு  புனிதமானதாகும். அம்மக்கள் இந்தப் பூமியை எப்பொழுதும் மறப்பதேயில்லை. ஏனெனில் இதுவே  அவர்களுக்குத் தாயாகும் .அவர்களே இந்த மண்ணுக்கு உரியவர்கள் . 

*   இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது சகோதரிகள். மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் எமது சகோதரர்கள். 

*  மலை முகடுகள், பசும்புல்வெளிகளி ன் பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடல்சூட்டின் இ தமா ன கதகதப்பு போன்றவையும் இங்குள்ள  மனிதர்கள் எல்லாமும் ஒரே குடும்பம் எனச் சியோட்டல் கூறுகிறார் .

*  இந்த நீரின் முணுமுணுப்புகள் எம் பாட்டன்மார்களின் குரல்களேயாகும்.
*  இந்த ஆறுகள் யாவும் எம் உடன்பிறந்தவர்கள். இவர்கள்தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள். 

*  இங்குள்ள ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடும் வனப்புமிகு நீரானது வெறும் தண்ணீரன்று ; எமது மூதாதையரின் குருதியாகும்.

*  இந்நிலம் புனிதமானது என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் இதனைக் கற்றுக்கொடுங்கள்.

* செவ்விந்திய மக்கள் பூமியைத் தாயாகவும் வானத்தைத் தந்தையாகவும் கருதக்கூடியவர்கள். 

*  இப்பூமியின் மீது எது வநது விழுந்தாலும் அவையெல்லொம் பூமித் தாயின் மீது வந்து விழுவனவேயாகும். 

*  ந்நிலமானது கடவுளும்   மதிக்கக்கூடிய ஒன்றாகும்.  ஆகவே இதற்குக் கெடுதல் செய்வதென்பது அதைனைப் படைத்த கடவுளை அவமதிக்கும் செயலாகிவிடும்  எனச் சியோட்டல் கூறுகிறார் .





===========================================================



Comments

Popular posts from this blog

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 1 புத்தக வினாக்கள்| மொழியை ஆள்வோம்! |மொழியோடு விளையாடு |Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 2-கவிதைப்பேழை - புத்தக வினாக்கள் | Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் -1 புத்தக வினாக்கள் | Tamil easy study 6 ,7 ,8