எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 1 புத்தக வினாக்கள் | Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 1 -உரைநடை உலகம்  புத்தக வினாக்கள்  | Tamil easy study

 

தமிழ் வரி வடிவ வளர்ச்சி  :       பக்கம்:12

மதிப்பீடு  

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

  1. தமிழ் எழுத்துக்கள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற_________ காரணமாக அமைந்தது .

அ) ஓவியக்கலை ஆ) இசைக்கலை இ) அச்சுக்கலை ஈ) நுண்கலை

விடை : அ) ஓவியக்கலை

 2.   வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து_________ என அழைக்கப்படுகிறது .

அ) கோட்டெழுத்து   ஆ) வட்டெழுத்து    இ) சித்திர எழுத்து     ஈ) ஓவிய எழுத்து

விடை : ஆ) வட்டெழுத்து

3.   தமிழ் எழுத்துச் சீர்திருத்த பணியில் ஈடுபட்டவர் __________. .

அ) பாரதிதாசன்  ஆ) தந்தை பெரியார்    இ) வ.உ. சிதம்பரனார்                                        ஈ) பெருஞ்சித்திரனார.

விடை : ஆ) தந்தை பெரியார் 

கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்கள்__________ என அழைக்கப்படுகின்றன .

விடை: கண்ணெழுத்துகள்
2. எழுத்துக்களில் புள்ளிகளால் ஏற்படும்  குழப்பங்களை
க்  களைந்தவர்_____________ .

விடை : வீரமாமுனிவர்



----------------------------------------------------------------------------------

குறுவினா:

1. ஓவிய எழுத்து என்றால் என்ன?
தொடக்ககாலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவோ இருந்தது இவ்வரிவடிவத்தை .ஒவிய எழுத்து என்பர் .

2. ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?
         ஒவ்வொரு வடிவமும் அவற்றுக்கு உரிய முழு ஒ
லியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் ஓசையை குறிப்பதாயிற்று இவ்வாறு ஒரு லிக்கு ஒரு எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர் .

3. ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?

        ஓலைச் சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர். 


 4. வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டனை எழுதுக.

   * எகர ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை அவர் களைந்தார். 

  * எ என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு ஏ என்னும் எழுத்தை நெடிலாகவும் ஒ என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு ஓ என்னும் எழுத்தாகவும் உருவாக்கினார். 

  * ஒ என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு ஓ என்னும் எழுத்தாகவும் உருவாக்கினார். 

_______________________________________________________

சிறுவினா:

1)  எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக?
         

         ஓலைச்சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளி பெறும் எழுத்துகளை எழுதும் போது அவை சிதைந்துவிடும் என்பதால் உள்ளே இடாமல் எழுதினர்.  ஓலைச்சுவடிகளில் நிறுத்தக் குறிகளும் பத்திப் பிரித்தலும் கிடையாது.  புள்ளி இடப்பட்டு எழுதவேண்டிய எழுத்துக்கள் புள்ளிகள் இல்லாமல் எழுதப்படும் பொழுது அவற்றின் இடம் நோக்கி மெய்யா உயிர்மெய்யா குறிலா நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது.  இதனால் படிப்பவர்கள் பெரிதும் இடருற்றனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.

2.)  தமிழ் எழுத்துக்களில் ஏற்பட்ட உருவ  மாற்றங்களை எழுதுக?

       நெடிலைக்  குறிக்க ஒற்றைப்புள்ளிக்குப் பதிலாக  இக்காலத்தில் துணைக்கால்(  ) பயன்படுத்தப்படுகிறது . 

       ஐகார உயிர்மெய்யைக் குறிக்க  எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப்புளிக்குப் பதிலாக இக்காலத்தில் இணைக்கொம்பு பயன்படுத்தப்படுகிறது .

ஔகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் கொம்பு கால் பயன்படுத்தப்படுகிறது 

 குற்றியலுகர குற்றியலிகர எழுத்துக்களின் மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில்  வழக்கொழிந்து விட்டது.


---------------------------------------------------------------------------

நெடுவினா :

1. எழுத்துக்களின் தோற்றம் குறித்து எழுதுக?
       

             மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும் பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துக்களை தெரிவிக்க விரும்பினான். அதற்காக பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான் இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.
       
           தொடக்க காலத்தில் எழுத்து  என்பது ஒளியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் வடிவமாக இருந்தது. இவ்வரிவடிவத்தை ஒவிய எழுத்து என்பர் .
                 ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒளியாகிய சொல்லை குறிப்பதாக மாறியது. ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் ஓசையைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு ஒர்  ஒலிக்கும் ஓர் எழுத்து என உருவான நிறைய எழுத்து நடை என்பர்.




-----------------------------------------------------------------------------------------------------------------

Comments

Popular posts from this blog

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 1 புத்தக வினாக்கள்| மொழியை ஆள்வோம்! |மொழியோடு விளையாடு |Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 2-கவிதைப்பேழை - புத்தக வினாக்கள் | Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் -1 புத்தக வினாக்கள் | Tamil easy study 6 ,7 ,8